புதுக்கோட்டையில் SDPI கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக ஒற்றை கோரிக்கை மாநாடு! இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திடுக SDPI கட்சி மாநில தலைவர் பங்கேற்பு.
25 ஆண்டுகளாக சிறையில் வாழும் அப்பாவி இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, புதுக்கோட்டை திலகர் திடலில் SDPI கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக, ஒற்றை கோரிக்கை மாநாடு மேற்கு மாவட்ட தலைவர் H.ஸலாஹுதீன் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார்.
"37 ஆயுள் முஸ்லிம் சிறைவாசிகள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது, தமிழக முதல்வர் உடனடியாக அப்பாவி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திட ஆணையிட வேண்டும், இல்லையெனில் இன்னும் வீரியமாக SDPI கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டு உரையாற்றினார்.மேலும் இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் R.ஹஸ்ஸான் பைஜி, விமன் இந்தியா மூவ்மென்டின் மாநில தலைவர் K.பாத்திமா கனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநாட்டில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஜகுபர் அலி உள்ளிட்ட மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொட்டும் மழையிலும் திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.