சேதுபாவாசத்திரம் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
என்ஜினீயரிங் மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள வடுகன்குத்தகையை சேர்ந்தவர் வைரக்கண்ணு, இவரது மகன் கதிர்வேல்(வயது 20). இவரது நண்பர் பாப்பாநாட்டை அடுத்த ஆம்பலாபட்டை சேர்ந்த அன்பழகன் மகன் ஹனீஸ்(20).
இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள அண்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.
மோட்டார் சைக்கிள்-கண்டெய்னர் லாரி மோதல்
நேற்று முன்தினம் மாலையில் இருவரும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மனோரா சுற்றுலா தளத்தில் கொண்டாடிய கல்லூரி விழாவில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர் திரும்பினர்.
வழியில் சின்னமனை என்ற இடத்தில் எதிரே மீன் லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை கவனிக்காமல் தங்களுக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கதிர்வேல் பலியானார். ஹனீஸ் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.