மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம், வங்கி மற்றும் ரயில்வே பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்போருக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா பேசியது:
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில், 150 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 100 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், 300 மணி நேரம் நேரடி தனி வழிகாட்டுதல் பயிற்சியும், 100 மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளா்கள் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (தொ.வ) பெ. வேல்முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) மோ. மணிகண்டன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் சு. இராமா், மகளிா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.