புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2001-2008-ஆம் ஆண்டு மாணவர்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது குடும்பத்துடன் சந்திக்கும் சங்கம நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் பான்டியராஜன் வரவேற்று பேசினார். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி அனுபவம் மற்றும் இப்பொழுது வேளையில் இருக்கின்ற அனுபவம் போன்ற மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் பழைய மறக்க முடியாத சில நினைவுகளை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்கள் பேசுகையில் பள்ளியின் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான அனைத்தையும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினர். அதைத்தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சத்திரம்பட்டினம் தலைவர் சின்னத்துரை, மீமிசல் கவுன்சிலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராமு, முன்னாள் தலைமை ஆசிரியர் காசிநாதன், சர்வேயர் சேகர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் KPP.பெரியசாமி உட்பட மற்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலான்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இப்பள்ளியில் படித்து பல்வேறு துறை வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் குமாரவடிவேல் நன்றி கூறினார்.
இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்களான முகமது யூசுப், மெர்ஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.