திருமயம் அருகே கோனாபட்டில் நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 60 சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில், பனை மரத்தின் பயன்பாடுகள் குறித்து சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினோத பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன் அடிப்படையில் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக நோட்டீசுகள் அடித்து திருமயம் முழுவதும் ஒட்டி சிறுவர்-சிறுமிகளை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
இதனை அறிந்த சிறுவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 60 சிறுவர்-சிறுமிகள் கோனாபட்டு அழகு பெருமாள் கோவில் ஊரணி கரையில் நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் இரண்டு பிரிவாக பந்தயம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே வீட்டில் தயாரித்த நுங்கு வண்டிகளுடன் சிறுவர்கள் பந்தயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு எல்லைக்கோட்டை நோக்கி ஓடி மீண்டும் திரும்பி வந்தனர். இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு தங்கம்-வெள்ளி நாணயங்கள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. திருமயம் அருகே நடைபெற்ற இந்த வினோத பந்தயத்தை காண அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.