புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் ஊராட்சி, கொடிக்குளம் வருவாய் கிராமம் புல எண் 219 - ல் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டு தலைமுறை, தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். தற்பொழுது இந்த புல எண் 219 முழுவதும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என தவறான உத்தரவு பிறப்பிக்கப்பாட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவர்களின் சொந்த இடத்தை பத்திரபதிவு செய்து கொள்ள முடியவில்லை. எனவே புல எண் 219-க்கு பிறப்பிக்கப்பட்ட தவறான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பலமுறை மனு செய்தும் கண்டுகொள்ளாத வக்ஃப் வாரியத்தை கண்டித்து வருகிற 12/06/2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் கோட்டைபட்டினம் கடைவீதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இப்படிக்கு,
TMMK, SDPI, MJK, KPM பொதுநல கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்கள்.
தகவல்: முகமது ராவுத்தர், கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.