சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான யுனஸ்கோ விருதை இந்தியாவில் முதன் முறையாக பெற்றுள்ள ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.
காரங்காடு மாங்குரோவ் காடுகள்
ஐக்கியநாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு ‘மைக்கேல் பட்டீஸ்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான விருதினை வழங்கி வருகிறது. 2004 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, முதன் முறையாக இந்த ஆண்டு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
பல்வேறு நாடுகள் இந்த விருதுக்காக விண்ணப்பித்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளரும், ஐ.எப்.எஸ் அதிகாரியுமான பகான் ஜெகதீஷ் சுதாகர் விருது பெற தேர்வாகியுள்ளார்.
கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் தனுஷ்கோடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மையம், காரங்காடு, உப்பூர், மண்டபம், கீழக்கரை, குந்துகால் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாங்குரோவ் காடுகள், கடலில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளுடன் கடல் பசுக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீனவர்கள், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என 20 நாட்களில் 600 நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவை குறித்த முழுமையான தகவல்களுடன் யுனஸ்கோ நிறுவனத்திற்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் சார்பில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த விருது முதல் முறையாக இந்தியாவிற்கு கிடைத்துள்ளது
ஜூன் 14-ல் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள விழாவில் 12 ஆயிரம் டாலர் ரொக்க தொகை மற்றும் சான்றிதழுடன் கூடிய இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை தமிழகத்தின் மூலம் நாட்டிற்கு பெற்றுதந்துள்ள வனத்துறை அதிகாரி பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.