புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு கருப்பூர் கே.சி.சி. அணியினர் சார்பில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. 90 மாட்டு வண்டிகள் பங்கேற்ற இந்த பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, புதுபூட்டு ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட எல்லையை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனை பொதுமக்கள் சாலையோரம் நின்று பார்த்து ரசித்தனர். இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு மொத்தம் சுமார் ரூ.2 லட்சம் வரை பணமும், கேடயமும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கான ஏற்பாடுகளை கருப்பூர் கே.சி.சி. அணியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.