மணமேல்குடி கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை




மணமேல்குடி கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

சாகர் கவாச் ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் 2026 என்ற பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கடற்படையினர் இணைந்து அரசங்கரை முதல் கட்டுமாவடி வரையும் உள்ள சோதனை சாவடிகளில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி வாகனத்தை முழுவதுமாக சோதனையிட்டனர்.

பின்னர் வாகனங்களில் இருந்தவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்? மற்றும் ஆவணங்களை பார்த்த பிறகே வாகனங்களை செல்ல அனுமதித்தனர். மேலும் மணமேல்குடி கோடியக்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

ரோந்து படகு

இதேபோல் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து படகு மூலம் போலீசார் கடலுக்குள் சென்று மீனவர்களிடம் அடையாள அட்டையை சரிபார்த்தனர். மேலும் படகையும் சோதனையிட்டனர். இதையடுத்து சந்தேகப்படியான நபர்களோ? பொருட்களோ? தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

இதேபோல் மீனவ கிராமங்களான புதுக்குடி, பொன்னகரம், அந்தோணியார்புரம், வடக்கம்மாபட்டினம், மேலஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற போலீசார் மக்களிடம் கடத்தல் சம்பந்தமாகவும், பயங்கரவாத தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் அனைத்து கடலோர பாதுகாப்பு குழும மற்றும் கடற்படையினர், நகர போலீசார் கலந்து கொண்டனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments