புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 32 மீன்பிடி கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளை மீன்வள துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாட்டுப் படகுகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 32 மீன்பிடி கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. இந்த படகுகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் மீன்வள துறை இணை இயக்குனர் சர்மிளா தலைமையில் திண்டுக்கல் மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தர பாண்டியன், புதுக்கோட்டை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 10 அணிகளாக பிரிந்து 32 கிராமங்களில் உள்ள2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு சாதனங்கள்
இந்த ஆய்வின் போதுபடகுகளின் பதிவு எண் மற்றும் படகு தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நல்ல நிலையில் இல்லாத படகுகளை உடனே சரி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், படகுகளில் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.