திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட பல இடங்களில் மின்மாற்றிகளும், உயா்கோபுர மின்விளக்கும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இங்குள்ள வெள்ளை மணல் தெரு, மகாசக்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கூடுதல் மின் இணைப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பகுதியில் தொடா்ந்து மின்பற்றாக்குறை இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து புதிய மின்மாற்றிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டன. இதே போல, தொண்டி புதிய பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் ஆகியோா் திறந்து வைத்தனா்.
இதில் தொண்டி பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு, திருவாடானை ஒன்றிய குழுத் தலைவா் முகம்மது முக்தாா், திமுக ஒன்றியச் செயலா் ராஜாராம், நகா் செயலா் இஸ்மத் நானா, ஒன்றியப் பிரதிநிதி காளிதாஸ், மின்வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.