முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் 17 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு! ஹாஜிகள் பெருமிதம்!!





திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் ரயில் பாதையில்   சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் அதிகாலையில் முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி செல்வதும் மீண்டும் காரைக்குடியில் இருந்து இரவு முத்துப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்வதுமாக இருந்து வந்தது.

அப்பொழுது வருட வருடம் புனித ஹஜ்ஜுக்கு முத்துப்பேட்டையில்  இருந்து புறப்படும் பொழுது அதிகமாக முத்துப்பேட்டையில் இருந்து இரயில் மார்க்கமாக சென்னை செல்வார்கள்,

அப்பொழுது முத்துப்பேட்டையில்  ரயில்வே ஸ்டேனுக்கு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என புனித ஹஜ்ஜுக்கு செல்பவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக பெருங் கூட்டமாக வந்து நல்ல முறையில் வழி அனுப்பி வைப்பார்கள் அத்துடன் ரயில் வண்டி புறப்படும் பொழுது பாங்கு சொல்லி முடியும் வரையிலும் அனைவரும் அமைதியுடன் இருந்து பின்னர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்க்கு செல்வார்கள்.

அதே போல் புனித ஹஜ்ஜை முடித்து சென்னையில் இருந்து ஊருக்கு வருகின்ற பொழுதும்
ஹாஜிகளை வரவேற்க முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகாலையிலே பொது மக்கள் மற்றும் உறவினர்கள் என வரவேற்க வந்து விடுவார்கள்.

ரயில் வந்ததும் ஹாஜிமார்களை வரவேற்று அவர்களை சலவாத்துகளுடன்
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பள்ளிவாசலுக்கு அழைத்து  வருவார்கள் 

முத்துப்பேட்டை - சென்னை 

17 ஆண்டுகளுக்குப் பிறகு முத்துப்பேட்டையில் இருந்து சென்னைக்கும் இரயிலில் ஹஜ் பயணம்  ஊர் மக்கள்.
வழியனுப்பி வைத்தனர் 
  
17 ஆண்டுகளுக்கு பிறகு முத்துப்பேட்டையில் இருந்து  சவுதி அரேபியா மெக்கா நோக்கி 16/6/2023  வெள்ளிக்கிழமை இரவு செங்கோட்டை சென்னை தாம்பரம்  SF எக்ஸ்பிரஸ் ரயில்  மூலம் சென்னைக்குப் பயணித்தனர்..
12 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் மற்றும் அவர்களை வளியனுப்பிவைக்க 100 க்கும் அதிகமானோர் வழியனுப்பு நிகழ்ச்சியில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கலந்துகொண்டு சிறப்பித்தனர்

உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் புனித ஹஜ்ஜுக்கு செல்பவர்களை சிறப்பாக வழியனுப்பிவைத்தும், ரயில் புறப்படும் பொழுது பாங்கு சொல்லியும் வழியனுப்பி வைத்தது மிக சிறப்பு!!நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு!

ஆங்காங்கே பாங்கு சத்தங்களால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!

அகலப்பாதையாக மாற்றம் செய்து முத்துப்பேட்டை  ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தலைநகர் சென்னைக்கு 
சிறப்பு தொடர் வண்டியில் புனித ஹஜ்ஜுக்கு செல்லுவது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நினைவூட்டல்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது!! 

முத்துப்பேட்டை மக்களின் கோரிக்கை

முத்துப்பேட்டை ஆண்மிக தலம் & சுற்றுலா தலமாக விளங்குகிறது 

முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகக் காரைக்குடி முதல் சென்னை வரை தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் சேவையைத் துரிதமாக இயக்க வேண்டும்.

இதுபோன்று தினசரி இராமேஸ்வத்தில் இருந்து சென்னைக்குக் பகல் நேரத்தில் எக்ஸ்பிரஸ் சேவையை  துவக்க வேண்டும் என்றும் ..

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரத்தை உயர்த்த வேண்டும் 

தற்போது முத்துப்பேட்டை வழியாக இயங்கி வரும் செகந்திராபாத் இராமநாதபுரம் & எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்லும் வேண்டும் என்று முத்துப்பேட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments