பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்ட ஒட்டகம் மீண்டும் பெங்களுருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடு, மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு குர்பானி கொடுப்பது வழக்கம். சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டகங்கள் பலியிட்டு குர்பானி கொடுப்பதை இஸ்லாமியர்கள் தவிர்த்து வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜிநகரை அடுத்த மருத்துவர் காலனி பகுதியில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்துள்ளதாக போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவர் காலனி பகுதிக்கு சென்று அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை கைப்பற்றி அதனை வாங்கி வந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.
திருப்பி அனுப்பப்பட்டது
அவர்களிடம் ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து ஒட்டகத்தை அவர்கள் வாங்கி வந்த இடமான பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்பி அனுப்பி வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.