பத்திரபதிவு புதிய கட்டிடம் அறந்தாங்கி நகரில் அமைக்க கோரி சிபிஐ தர்ணா




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதிய பத்திர பதிவு அலுவகத்தை கட்டவேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா போராட்டம் நடத்தியது.

நகர செயலாளர் க.அஜய்குமார்கோஷ், தலைமை தாங்கினார்.நகர துணை செயலாளர் பாலமுருகன்,நகர குழு பழக்கடை குமார்,நகர நிர்வாக குழு இராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் த.செங்கோடன்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வரதராஜன், இணைபொதுச்செயலாளர் முனைவர் முபாரக் அலி,மாவட்ட பொருளாளர் கிரீன் முகம்மது, நகர தலைவர் புவனா செந்தில், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் இராஜேந்திரன்,நகர் மன்ற உறுப்பினர்கள்: காசிநாதன், வித்தியாசரவணன், ஆகியோர் கோரிக்கை குறித்து  பேசும்போது 

அறந்தாங்கி நகரில் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், நில அளவையர் அலுவலகம், வட்டவழங்கல் அலுவலகம் மற்றும்  கருவூலம் ஆகியவைகள் ஒரே வளாகத்தில் தனித்தனி கட்டிடங்களில் செயல்பட்டு வந்தன. தற்போது நீதிமன்றம் எல்என் புரத்திரத்திலும், காவல் நிலையம் பேராவூரணி சாலையிலும், தாலுக்கா அலுவலகம் அதே இடத்திலும் புதிய கட்டிடங்கள் கட்டி செயல்படுகின்றன. 

ஆனால் பத்திர பதிவு அலுவகம் மட்டும் பட்டுக்கோட்டை சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத அறந்தாங்கி புறநகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பத்திரபதிவு அலுவலகம் என்பது பணம் மற்றும் உயிர் ஆகியவற்றிற்கு பாதுகாப்பான இடமாகவும், உடனடியாக காவல்துறையால் பாதுகாக்கக்கூடிய இடமாகவும், அனைத்து மக்களும் வந்து செல்லும் தூரத்திலும் இருக்கவேண்டும். ஆனால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மேற்கண்ட எந்த தகுதியும் இல்லாத இடமாக உள்ளது.எனவே அறந்தாங்கி பத்திரபதிவு புதிய கட்டிடத்தை அறந்தாங்கி நகர் பகுதியிலேயே கட்டவேண்டும் என தெரிவித்தனர்.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments