புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் நேற்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் கடையும், அறந்தாங்கியில் 4 டாஸ்மாக் கடையும், ஆலங்குடியில் ஒரு கடையும், கறம்பக்குடியில் 2 கடையும், கீரனூரில் 2 கடையும், கீரமங்கலம், திருமயத்தில் தலா ஒரு கடையும் என மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 144 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் 12 கடைகள் மூடப்படுவதன் மூலம் மொத்த எண்ணிக்கை 132 ஆக குறைந்துள்ளது. புதுக்கோட்டை பஸ் நிலையம் எதிரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிவந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடை இருப்பதாக நினைத்து சிலர் கடைக்கு வந்து பார்த்தபோது அங்கு கடை மூடப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றமடைந்தனர். பின் அருகில் உள்ள கடையை விசாரித்து அங்கு சென்றனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆலங்குடி தாலுகா பழைய நீதிமன்றம் அருகில் டாஸ்மாக் கடை இருந்தது. இந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதன்படி ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இதையடுத்து கடை மூடப்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் சமூக ஆர்வலர்கள், ெபாதுமக்கள் சேர்ந்து மூடு விழா நடத்தினர். தொடர்ந்து மூடிய கடைக்கு மாலை அணிவித்து சூடம் காண்பித்து, தேங்காய் உடைத்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.