கோபாலப்பட்டிணத்தில் (ஜூன்.29) GPM பைத்துல்மால் நூலகம் திறப்பு விழா அழைப்பிதழ்!



கோபாலப்பட்டிணத்தில்  (ஜூன்.29) கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி சாபில் நூலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பைத்துல்மால் கமிட்டி சார்பில்  29/06/2023 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் (மக்கா 1-வது வீதி) பெரிய பள்ளிவாசல், ரேஷன் கடை அருகே அமைந்திருக்கும் GPM பைத்துல்மால் அலுவலகத்தில் புதிதாக நூலகம் திறக்கப்பட உள்ளது.

அதுசமயம் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.

புதிதாக திறக்கப்பட உள்ள GPM பைத்துல்மால் நூலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. எனவே செல்பேசியில் மூழ்கி கிடைக்கும் சமுதாய சொந்தங்கள் தங்களுடைய வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

கெளரவ தலைவர்: ஹாஜி.S.வருசை முகம்மது செல்:87784 98599
செயலாளர்: ஹாஜி.K.முகம்மது அப்துல்லாஹ் செல்: 94432 52614
தலைவர்: ஹாஜி. M.பாவா மரைக்காயர் செல்: 96002 00181 
பொருளாளர்: ஹாஜி.A.முகம்மது காசிம் செல் : 97870 03539

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments