கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் குறித்த அறிவிப்பு!



கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பிறை 10 அன்று 29/06/2023 வியாழக்கிழமை ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. 

இதையடுத்து கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடைபெற உள்ள நிலையில் காலை 6.30 மணிக்கு சங்கு அடிக்கப்பட்டு, 6.40 மணி முதல் பயான் நடைபெறும், 

அதனை தொடர்ந்து மிக சரியாக 7.00 மணிக்கு தொழுகை நடைபெறும் என ஜமாத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநாள் உரையை அவுலியா நகர் பள்ளிவாசல் இமாம் மௌலவி.J.உஸ்மான் அலி நாஃபியீ நிகழ்த்த உள்ளார்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

இந்த வருடம் 2023 நோன்பு பெருநாளை முன்னிட்டு  கோபாலப்பட்டிணம்  கடற்கரை பள்ளிவாசல் எதிரில் இருக்கக்கூடிய  ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.

நாள் : 29/06/2023 வியாழக்கிழமை 

சங்கு அடிக்கும் நேரம் : காலை 06.30 AM 

பயான் ஆரம்பமாகும் நேரம்: காலை 6:40 AM

தொழுகை ஆரம்பமாகும் நேரம்: காலை 7.00 AM

உரை நிகழ்துபவர் :  இமாம் மௌலவி. J.உஸ்மான் அலி நாஃபியீ
அவுலியா நகர் பள்ளிவாசல்  , கோபாலபட்டிணம்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments