மீமிசல் அருகே மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டு வண்டிகள், குதிரை வண்டி பந்தயமும் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி இலக்கை நோக்கி மாடுகள், குதிரை வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நின்று பந்தயத்தை கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டிகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பணமும், கேடயமும் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியை மீமிசல் போலீசார் மேற்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments