மயிலாடுதுறை- காரைக்குடி ரயில் பாதையில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் நடைமேடை 480 மீட்டர் நீளம் கொண்டது. இந்த நடைமேடையில் 21 ரயில் பெட்டிகளை கொண்ட விரைவு ரயில்கள் வரும்போது சில பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது.இதனால் பயணிகள் ஏற இறங்க சிரமமாக உள்ளது. தற்போது செகந்தராபாத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் விரைவு ரயில் சில வாரங்களாக கால தாமதமாக அதிராம்பட்டினத்துக்கு இரவு நேரத்தில் வருகிறது.
சென்னையில் இருந்து இந்த ரயில் அதிராம்பட்டினத்திற்கு வரும்போது குளிர் சாதன வசதி உள்ள இரயில் பெட்டிகள் நடைமேடையை விட்டு இருளான புதர்கள் அடங்கிய பகுதியில் நிற்கிறது. இதனால் பயணிகள் இரவு நேரத்தில் முட்புதர்கள் அடர்ந்த இடத்தில் இறங்க வேண்டியுள்ளது.வருங்காலத்தில் இந்த ரயில் தடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் 24 ரயில் பெட்டிகள் நடைமேடை பகுதியிலேயே நிற்கும் அளவிற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் அதிராம்பட்டினம் ரெயில் நிலைய நடை மேடைகளை நீட்டித்து தர வேண்டும் என அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள ரயில் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.