தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு




இராமநாதபுர மாவட்டம் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடக்கோரிய வழக்கில், அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 6 தேதிக்கு ஒத்திவைத்து.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளராக கலந்தார் ஆஷிக் அகமது உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தொண்டியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன இந்த கிராம மக்கள் அனைவரும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை சார்ந்து உள்ளனர். இது மட்டுமில்லாமல் கிழக்கு கடற்கரை சாலைக்கு அருகே இந்த மருத்துவமனை உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் அதிக விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இங்கு வைத்து தான் முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். உயரிய மருத்துவ வசதி இல்லாததால் முதலுதவி சிகிச்சை முடித்து அனைவரும் 50 கி.மீ உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை:

இதனால் பலர் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. எனவே மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது அந்த வழக்கில் தமிழக அரசு விரைவாக தொண்டி அரசு மருத்துவமனை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என உறுதியளித்து.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது ஆனால் இதுவரை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. எனவே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஏற்கனவே அரசு தரப்பில் அரசு மருத்துவமனையாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதி, எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 6ஆம் தேதி அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆறாம் தேதி ஒத்தி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments