வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை




கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வள துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments