புதுக்கோட்டை வழியாக செல்லும் கோவை - ராமேசுவரம் ரயிலில் படுக்கைப் பெட்டிகளைக் குறைக்கக் கூடாது ரயில் பயணிகள் கோரிக்கை




கோவை - ராமேசுவரம் வாராந்திர ரயிலில் 4 படுக்கைப் பெட்டிகளைக் குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டிகளை இணைக்கும் ரயில்வே துறையின் முடிவு, சாதாரண பயணிகளைக் கடுமையாக பாதிக்கும் என்கிறாா்கள் ரயில் பயணிகள்.

கோவை - ராமேசுவரம் இடையே புதுக்கோட்டை வழியாக

இயக்கப்படும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்த வண்டி கோவை - ராஜ்கோட் வாராந்திர வண்டியோடு பெட்டி பகிா்வு உள்ளதால் இதன் சேவையை அதிகரிக்க சாத்தியமில்லை என்று ரயில்வே நிா்வாகம் கூறிவருகிறது. இருப்பினும், இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம், இதில் 13 படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன என்பதுதான்.

இந்நிலையில் லாப நோக்கை கருத்தில் கொண்டு வரும் ஆகஸ்ட் 1 முதல் கோவை- ராமேசுவரம் வாராந்திர ரயிலில் 4 படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 4-ஐ சோ்ப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் ஏறத்தாழ 250 புதுக்கோட்டைப் பயணிகள் பயன்படுத்தி கோவை, ஈரோடு, கரூா் சென்றுவரும் நிலையில், கோவை- ராமேசுவரம் ரயிலில் படுக்கை வசதிப் பெட்டிகளைக் குறைக்காமல் இந்த ரயிலை இயக்க ரயில்வே துறை மாற்று அறிவிப்பை வெளியிட வேண்டும் என ரயில் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுகையில் இருந்து கரூா், ஈரோடு, திருப்பூா், கோவைக்கு நேரடி ரயிலாக இதுவொன்றே இருக்கும் நிலையில், இதுகுறித்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் குரல் எழுப்பி நடைமுறைக்கு வரவுள்ள நெருக்கடியைத் தடுக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments