வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 5-7-2023 ஆய்வு செய்த பின்பு தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
தென்னக ரயில்வே சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு இணையான உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை இரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மறு கட்டமைப்பின் போது கூடுதலான நடைமேடை ஏற்படுத்தப்படும். திருநெல்வேலி சென்னை இடையிலான வந்தே பாரத் துறையில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படலாம். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
அதிகமான ரயில்வே வருவாய் தரும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் அளவிற்கு அமைக்கப்படும் அதற்கான பணிகளை ஆய்வு செய்து ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.