புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அம்ரித் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் எந்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. இதில் முன்பதிவில்லா டிக்கெட் உள்பட ரெயில்வே தொடர்பாக இதர தகவல்களை பயணிகள் பெற்று வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் நேற்று பழுதாகியிருந்தது.
இதனால் ரெயில் நிலைய கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் பலர் காத்திருந்தனர். டிக்கெட் கவுன்ட்டரில் ஊழியர்கள் இல்லாத நேரத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரத்தில் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெற முடியும். ஆனால் நேற்று இந்த எந்திரம் செயல்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர். தானியங்கி டிக்கெட் எந்திரம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.