வெளியூர் மரண அறிவித்தல்: ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த A.M. முகம்மது பாக்கர் அவர்கள்



R.புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம்.அப்துல் ஹக்கீம் அவர்களின் மகனும், கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலனி) 3-வது வீதியை சேர்ந்த அகமது கபீர் அவர்களுடைய மருமகனும், அலி அக்பர் மற்றும் முகமது மசூது அவர்களுடைய மச்சானும், முகம்மது யாசீன் அவர்களின் தந்தையுமான (மீமிசல் லக்கி  எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர்)  A.M. முகம்மது பாக்கர் அவர்கள் இன்று 10/07/2023 திங்கட்கிழமை  மரணமடைந்து விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 11/07/2023 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் ஆர்.புதுப்பட்டினம் மையாவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments