கோபாலப்பட்டிணம் , மீமிசல் பகுதியில் மழை



கோபாலப்பட்டிணம் , மீமிசல் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை (ஜூலை10-15) வரை 6 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா  மீமிசல்   கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த வருகிறது  ,‌ஆறுதலாக  அவ்வபோது மழையும் பெய்து வருகிறது.

இன்று ஜூலை 10 திங்கட்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று மழை பெய்து வருகிறது. கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மழை பெய்து வருகிறது மலைப்பிரதேசம் போல  குளிர் நிலவி வருகிறது.இதனால் கோபாலப்பட்டிணம்.பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது போன்று நமதூர்  மேகமூட்டம் மற்றும் இயற்கையான புகைப்படங்களை  எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments