புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய தாலுகாக்களை சேர்ந்தவர்களுக்கு ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், மணமேல்குடி துணை தாசில்தார் ஜபருல்லா, அறந்தாங்கி துணை தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். குளத்துக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி கூத்தப்பெருமாள்:- வெள்ளாற்றில் அதிக அளவு சீமைக்கருவேல மரங்கள் உள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி தர வேண்டும்.
விவசாயி சுப்பிரமணி:- வறட்சி நிவாரணம் இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அதை உடனடியாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி வடிகால் தலைவர் கொக்குமடை ரமேஷ்:- விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் விதைகளையும், விவசாய கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் கோரிக்கை குறித்து பேசினர். விவசாயிகள் கூறியதை கேட்டறிந்த கோட்டாட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதாக கூறினார். இதில் அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.