பலத்த மழையால் இருளில் மூழ்கிய கிராமத்திற்கு கொடிக்குளம் உதவி மின் பொறியாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் உட்பட பரவலாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 10/07/2023 அன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மீமிசல் பகுதியில் பல இடங்களில் மின்னல் தாக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை அறிந்த கொடிக்குளம் மின்வாரிய உதவி மின்பொறியாளர் ஷோபனா இரவோடு இரவாக சரி செய்து மின்சாரத்தை தடையின்றி வழங்கினார்.
அதே போன்று ஆர்.புதுப்பட்டினத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராமமே இருளில் மூழ்கி இருந்தது. இதனால் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரங்களை அப்புறப்படுத்தி, அறுந்து விழுந்த மின் கம்பிகளை மாற்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தார். சம்பவ இடத்திற்க்கே வந்து சரி செய்து மின்சாரம் வழங்கிய உதவி மின் பொறியாளர் ஷோபனாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.