கட்டுமாவடியில் SDPI கட்சி அறந்தாங்கி வடக்கு தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம்




கட்டுமாவடியில் SDPI கட்சி அறந்தாங்கி வடக்கு தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி வடக்கு தொகுதியின் அனைத்து செயல்வீரர்களுக்கான கூட்டம்  (15.07.2023) கட்டுமாவடி P.M.S. மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அறந்தாங்கி வடக்கு தொகுதியின் தலைவர் M.ஷேக் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் T.ஜமிரல் மஹ்மூது தொகுப்புரையாற்ற தொகுதி செயலாளர் S.M.யாசர் அரபாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தை துவக்கி வைத்தார்.

கூட்டத்திற்கு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது, மாவட்ட செயலாளர் M.முகமது அபுதாலிபு மற்றும் மாவட்ட பொருளாளர் M.முகமது அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சகோதரி சபியா நிஜாம் அவர்களும் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் அறந்தாங்கி வடக்கு தொகுதிக்குற்பட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாக கட்டுமாவடி நகர செயலாளர் M.M. யாசர் அரபாத் நன்றியுரை ஆற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments