புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வண்ண பேனாக்கள் உள்பட எழுது பொருட்களை ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர். பேனா, பென்சில் இவற்றை கொண்டு எங்களால் எழுத முடியவில்லை.
பார்வை உள்ள படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம் என்று மாணவர்கள் விரும்பி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களை அப்பள்ளியின் தலைமையாசிரியர் வடிவேலன் அழைத்து வந்து மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். இந்த மாணவர்களின் செயலை நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.