போபால் ரானி கமலபாதியில் இருந்து டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து..!





  
போபால் ரானி கமலபாதியில் இருந்து டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்ற  வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த ரெயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரானி கமலபாதி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி  ஹஜ்ரத் நிஜாமுதீன் நோக்கி சென்று கொண்டிருந்தது.   

காலை 8.30 மணியளவில் குர்வாய் கெதோரா ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரெயில் சென்றபோது 14-வது பெட்டியின் அடிப்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினர். 

தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் பற்றிய தீயை அணைத்தனர். 
 
இதுகுறித்து ரயில்வே துறை கூறுகையில், பெட்டியின் அடியில் இருந்த பேட்டரியில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும், ஆய்வுக்கு பிறகு சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.

அண்மையில் கோரமண்டல் - ஹவுரா ரயில்கள் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் நாட்டு மக்கள் மனங்களில் இருந்து விலாகததால் ரயில் விபத்து சிறியதாக இருந்தாலும்கூட பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments