கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 5-வது வீதியில் பல மாதங்களாக தேங்கி இருந்த சாக்கடையை இளைஞர்கள் அகற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 5-வது வீதியில் பல மாதங்களாக சாக்கடை தேங்கி இருப்பதால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவுலியா நகர் 5-வது வீதியில் நேற்று 17/07/2023 பல மாதங்களாக தேங்கி நோய் தொற்று ஏற்பட காரணமாக இருந்த சாக்கடையை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
அவுலியா நகரில் மூன்று வீதிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தால் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையானது மேடு, பள்ளமாக அமைக்கப்பட்டதால் தெருவில் கழிவுநீர் தேங்கி நின்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவுலியா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை, குப்பைகள் மற்றும் சாலை வசதி செய்து தரவேண்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
அவுலியா நகர் 5-வது வீதியில் தேங்கி நின்ற சாக்கடையை அகற்றிய இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இப்பணியை செய்த அவுலியா நகர் பகுதி இளைஞர்களை GPM மீடியா மனதார பாராட்டுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.