ரூ.50 ஆயிரம் மீட்பு
திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் நேற்று முன்தினம் தனது மகள் மான்சி (வயது 19) உடன் புதுக்கோட்டையில் நகர கூட்டுறவு வங்கியின் அருகே மாலை நேர சந்தைக்கு சென்றார். அப்போது சாலையில் கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை மான்சி எடுத்து தனது தந்தை சந்திரனிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் நேற்று ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அந்த பணம் மாலை நேர சந்தையில் ஒரு கடையின் உரிமையாளரான காமராஜபுரத்தை சேர்ந்த சரவணன், செந்தில்குமார் ஆகியோருடையது என தெரியவந்தது.
உரியவரிடம் ஒப்படைப்பு
காதணி விழாவுக்கு செய்முறை செய்வதற்காக நகர கூட்டுறவு வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த போது தவறவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.
பணத்தை மீட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்தார். மேலும் அந்த பணத்தை உரியவரிடம் அவரையே ஒப்படைக்க வைத்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உடன் இருந்தார். மேலும் அவரது நேர்மையை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.