புதுக்கோட்டை மாவட்ட ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மதியழகன், முத்தையா, சுப்பையா, செல்வராணி கணேசன், ராஜா, சவரிநாதன், சந்திரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரோகையா, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் செப்டம்பர் 15-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் திறந்த வெளி மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் பங்கேற்பது. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு செய்திடும் வகையில் செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை துரிதப்படுத்தி வருகிற 27-ந் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று கழக பொது செயலாளரிடம் வழங்குவது. 6 சட்டமன்ற தொகுதி கொண்ட புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வரவேண்டும். காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தினை விரைவாக மேற்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு உதவிட ஷேர் ஆட்டோக்களை இயக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சிற்றரசு, அரசியல் ஆய்வு மைய குழு உறுப்பினர் அரங்க நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.