முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பெண்களுக்கு 100 நாள் வேலை முழுமையாக வழங்காமல் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களில் சிலரது அட்டைகளில் சீல் வைத்ததால் மற்ற பெண் பணியாளர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விடுகிறது.
எனவே முறையாக வேலை வழங்க வேண்டும் என கூறி வடசேரிப்பட்டி, முல்லைநகர், சிவப்பட்டி, தாவூதுமில் கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முறையாக வழங்க நடவடிக்கை
அப்போது அட்டைகளில் சீல் வைக்கப்பட்டதால் வேலை கிடைக்காது என்பது தவறான தகவல். அதேபோல் அனைத்து நபர்களுக்கும் 100 நாள் வேலை முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பெண்கள் கூறுகையில், சட்டபூர்வமாக 100 நாள் வேலை பணியாளர்களுக்கு ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை ஆண்டுக்கு முழுமையாக வழங்க வேண்டும். வசதி படைத்தவர்கள் அட்டையில் மட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. எங்களை போன்ற ஏழை எளியவர்களின் அட்டையில் சீல் வைக்கப்படாததால் எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.