மணமேல்குடி அருகே பயமறியானேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து வருகிற ஜூலை.27 மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், நெல்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட பயமறியானேந்தல் கிராமத்தில் தெரு மற்றும் சாலை ஆக்கிரமிப்பு அகற்றித்தராததை கண்டித்து வருகிற 27/07/2023 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் மணமேல்குடி ECR கிழக்கு சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
பயமறியானேந்தல் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தெருவின் இரு புறங்களிளும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த மூன்று வருடங்களாக பல முறை மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் செவி சாய்க்காத காரணத்தால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கண்டன சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த மாபெரும் கண்டன சாலை மறியல் போராட்டமானது கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது.
1.உடனடியாக தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும்.
2.மூன்று ஆண்டுகளாக டென்டர் எடுத்தும் கட்டப்படாத படித்துரையை உடனடியாக கட்டி தர வேண்டும்
3. பயமறியானேந்தல் ஏரி ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்ற வேண்டும்.
இப்படிக்கு:-
பயமறியானேந்தல் கிராம வளர்ச்சி மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள்
தகவல்: சுதாகர், பயமறியானேந்தல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.