ஆவுடையார் கோவிலில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்




மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்தை தடுக்க தவறியதாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி தாலுகா செயலாளர் எம்.எஸ்.கலந்தர், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வீரையா மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments