புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.
பகுப்பாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆண்டு பொதுத்தேர்வு (2022-2023) பகுப்பாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் 10-ம் வகுப்பு பயிலும் 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும், 12-ம் வகுப்பு பயிலும் 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதமும் என காசோலைகளையும் மற்றும் காமராஜர் விருதிற்கான சான்றிதழ்களையும் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி குறித்து வட்டார வாரியாகவும், பள்ளி வாரியாகவும், பாட வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
100 சதவீதம் தேர்ச்சி
மேலும், பள்ளிகளுக்கு அதிக நாட்கள் வருகை தராத மாணவ, மாணவிகளை பள்ளிக்கு தொடர்ந்து வருகை புரிவதற்கான வருவாய்த்துறை, ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், படிப்பில் கவனம் குறைவான மாணவர்கள் மீது சிறப்பு கவனம் மேற்கொண்டு, சிறப்பு வகுப்புகள் மூலமாக அவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது குறித்தும், பாட வாரியாக கடந்த ஆண்டில் அதிகம் தோல்வியடைந்த பாடப்பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நடப்பு கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பிடம் பெற அனைத்து தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் பொறுப்புடன் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), முருகேசன் (அறந்தாங்கி), ஜெயராஜ் (தனியார் பள்ளிகள்), முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், திரு.ராஜு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், உதவித்திட்ட அலுவலர்கள் சுதந்திரன், தங்கமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளி துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, வேலுச்சாமி, இளையராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.