வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா & ஓணம் பண்டிகை முன்னிட்டு எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே கூடுதல் வாராந்திர புதிய நாட்களில் சிறப்பு ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு







எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரயில்

காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி ஆலய திருவிழா & ஓணம் பண்டிகை முன்னிட்டு எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே வாராந்திர  புதிய ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:06039) இந்த வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கட்கிழமை பகல் 01.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். 
 
வாராந்திர புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள் கூடுதலாக வருகிற 
ஆகஸ்ட் 28 ந்தேதி முதல் செப்டம்பர் 11 ந்தேதி வரை  திங்கட்கிழமைகளில் இயக்கப்படும்

வேளாங்கண்ணி- எர்ணாகுளம்

வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06040) இடையே மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 

 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற ஆகஸ்ட் 29ந்தேதி முதல் செப்டம்பர் 12ந்தேதி வரை செவ்வாய்கிழமைளிகல் இயக்கப்படும்

எங்கெங்கு நின்று செல்லும்?

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 

கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி , சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்

ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரயில் சேவை ஏற்கனவே சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை இயங்கி வருகிறது.. இது கூடுதலாக திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் இயங்கும்

ஏற்கனவே இயக்கப்படும் ரயில்

வண்டி எண்: 06035 = எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

எர்ணாகுளம் - சனிக்கிழமை நண்பகல்  புறப்பட்டு 

வேளாங்கண்ணி - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேரும் 

வண்டி எண்: 06036 = வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

வேளாங்கண்ணி - ஞாயிற்றுக்கிழமை மாலை  புறப்பட்டு 

எர்ணாகுளம் - திங்கட்கிழமை நண்பகல் சேரும்

புதிய ரயில் சேவை

வண்டி எண்: 06039 = எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.

எர்ணாகுளம் - திங்கட்கிழமை நண்பகல்  புறப்பட்டு 

வேளாங்கண்ணி - செவ்வாய்க்கிழமை அதிகாலை சேரும் 

வண்டி எண் : 06040 = வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

வேளாங்கண்ணி - செவ்வாய்க்கிழமை மாலை  புறப்பட்டு 

எர்ணாகுளம் - புதன்கிழமை நண்பகல் சேரும்

முன்பதிவு : ஜூலை 29 சனிக்கிழமை நாளை காலை 08.00 மணிக்கு தொடங்கிறது

திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே புதிய வாரந்திர சிறப்பு ரயில் 







திருவனந்தபுரம் – எர்ணாகுளம் இடையே வாராந்திர புதிய  சிறப்பு ரயில் சேவை  இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை திண்டுக்கல் திருச்சி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி ஆலய திருவிழா & ஓணம் பண்டிகை முன்னிட்டு திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி இடையே வாராந்திர  சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:06020) இந்த வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை மதியம் 03.25 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 4.00 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். 
 
வாராந்திர புதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவைகள்  வருகிற 
ஆகஸ்ட் 23ந்தேதி முதல் செப்டம்பர் 06 ந்தேதி வரை  புதன்கிழமைகளில் இயக்கப்படும்

வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் 

வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் (06019) இடையே மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 07.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். 

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள்,  வருகிற ஆகஸ்ட் 24ந்தேதி முதல் செப்டம்பர் 07ந்தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்

எங்கெங்கு நின்று செல்லும்?

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், திருவனந்தபுரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 

குழித்துறை,
நாகர்கோவில் டவுன், 
வள்ளியூர்
திருநெல்வேலி
கோவில்பட்டி
சாத்தூர்
விருதுநகர்
மதுரை
திண்டுக்கல்
திருச்சி 
தஞ்சாவூர் 
திருவாரூர், 
நாகப்பட்டினம்

ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு : ஜூலை 29 சனிக்கிழமை நாளை காலை 08.00 மணிக்கு தொடங்கிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments