புதுச்சேரி காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணியினை பற்றியும் அந்த பணி நடைபெறும் போது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் எப்போது இந்த பணி நிறைவுறும் என்றும் கேட்டிருந்தார்கள்.
அதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் . நித்தின் கட்கரி எழுத்துப்பூர்வமான பதிலை மக்களவையில் அளித்தார்கள்.
அதில், தேசிய நெடுஞ்சாலை எண் 45 A விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேலை ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வேலை எப்போது முடியும் என்பது தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெரிய பணிகள் நடக்கும்போது சிறு சிறு தொந்தரவுகள் பொதுமக்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அதுவும் குறிப்பாக பாலங்கள் கட்டும் இடங்களில் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது இன்றியமையாதது.
இருந்தபோதிலும், எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தக்க பாதுகாவலர்கள் ஆங்காங்கே அமர்த்தப்பட்டு போக்குவரத்தை சீர் செய்யப்படுகின்றது.
விழுப்புரம் புதுச்சேரி வரையிலான 29.00 கிலோமீட்டர் தூரம்
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், புதுச்சேரியில் இருந்து பூண்டியாங்குப்பம் வரையிலான 38.00 கிலோமீட்டர் தூரம், 2024 மார்ச் மாதமும், பூண்டியாங்குப்பத்திலிருந்து சட்டநாதபுரம் வரையிலான 56.80 கிலோமீட்டர் தூரம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும், சட்டநாதபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான 55.76 கிலோ மீட்டர் தூரத்தை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.