உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா வெளிநாடுகளிலிருந்து வரும் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் தருவது இசிஏ மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சவுதி அரேபியாவில் நடுத்தர அளவில் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,763 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.88.64 லட்சம் ஆகும். உலகிலேயே இப்பணிக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சம்பளம் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும் உலகளவில் இதுவே அதிகபட்சம்.
அதேசமயம், மிகுந்த செலவினங்கள் நிறைந்த நகரமாக பிரிட்டன் உள்ளது. குறிப்பாக, பிரிட்டனுக்கும், ஜப்பானுக்கும் இடையே வெளிநாட்டினருக்கான ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் சராசரி பேக்கேஜ்-சம்பளம், வரி மற்றும் தங்குமிடம், சர்வதேச பள்ளிப்படிப்பு மற்றும் பயன்பாடுகள் போன்ற சலுகைகள் உட்பட 4,46,608 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.62 கோடி) மட்டுமே வழங்கப்படுகிறது. என்றாலும் இதில் சம்பளம் என்பது மொத்தத்தில் 18 சதவீதம் மட்டுமே.
தரவுகளின் அடிப்படையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் ஹாங்காங் மூன்று இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், சிங்கப்பூர் 16-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜப்பான், இந்தியா, சீனா ஆகியவை உலகளாவிய தரவரிசையில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.