கோபாலப்பட்டிணத்தில் களைகட்டிய இரண்டாவது நாள் பெருநாள் தோப்பு!



கோபாலப்பட்டிணத்தில் இரண்டாவது நாள் பெருநாள் தோப்பு களை கட்டியது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு பெண்களுக்கான தோப்பு நடைபெறுவது வழக்கம். இங்கு தீன்பண்ட கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்படுவதால் இந்த தோப்பிற்கு கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் உறவினர்கள் அதிகமாக திரள்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 29/06/2023 மாலை 5 மணியளவில் கோபாலப்பட்டிணத்தை கருமேகங்கள் சூழ்ந்தது. அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் பெருநாள் தோப்பு களையிழந்து காணப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் தோப்பு அன்று மழை இல்லாததால் பெண்கள் கூட்டத்தால் நேற்றைய தினம் பெருநாள் தோப்பு களை கட்டியது.
ஹஜ் பெருநாள் தோப்பானது வழக்கமாக மூன்று நாட்கள்  நடைபெறும் , முதல் நாள் அன்று மழை பெய்த காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments