ஆலங்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.10 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு நடைபெற்றது.
ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அதிநவீன தொழில்நுட்பத்துடன் குளிரூட்டப்பட்ட திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை புதிய வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதுக்கோட்டை விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை புஷ்பம் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான உஷா செல்வம், திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் தனராணி, புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் முருகன், புதுக்கோட்டைவிடுதி கிராம நிர்வாக அலுவலர் வீரமுத்து, ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், பள்ளி பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், புதுக்கோட்டைவிடுதி ஊர் நலச்சங்கம், ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.