திருச்சியில், ரூ.20 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக் இர்பான். இவரது தாயாரின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசிய மர்ம நபர், ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி, அதில் நீங்கள் வாடிக்கையாளராக உள்ளீர்கள். இதனால் உங்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
மேலும் பரிசுத்தொகையை பெற ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். அதற்காக குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய இர்பானின் தாயார் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு முதலில் குறிப்பிட்ட தொகையை அனுப்பினார். ஆனால் அந்த நபர் பல்வேறு காரணங்களை கூறி மீண்டும் பணம் அனுப்ப கூறியதால் கொஞ்சம், கொஞ்சமாக மொத்தம் ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
அதன்பின்னர் பல நாட்களாகியும் பரிசுத்தொகை வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தனது மகன் இர்பானிடம் கூறினார். இது குறித்து இர்பான் திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.