கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 2-ம் கட்டமாக விண்ணப்பம், டோக்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.
விண்ணப்ப பதிவு முகாம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 தாலுகாவில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 414 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
2-ம் கட்டமாக...
இதற்கிடையில் 2-ம் கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 தாலுகாவில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது. மொத்தம் 413 ரேஷன் கடைகளை சேர்ந்த 1 லட்சத்து 85 ஆயிரத்து 544 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கப்பட உள்ளன.
தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் 535 இடங்களில் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.