புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் `கூண்டுக்குள் வானம்' எனும் அரங்கு சிறைத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறைகளில் உள்ள கைதிகள் வாசிப்பதற்காக புத்தகங்களை பரிசாக பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறை கைதிகளுக்காக பொதுமக்கள் பலர் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் பள்ளி சார்பில் பணத்துடன் புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி, அதனை கைதிகளுக்காக பரிசாக சிறைத்துறை அரங்கில் வழங்கினர். இதில் ரூ.4 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் வழங்கப்பட்டதாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.