பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு கூடுதலாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும், அதன் நடுவே அமையும் தூக்குப்பாலம் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரி கூறினார்.
பாம்பன் ரெயில் பாலம்
பாம்பன் கடலில் தற்போதுள்ள ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டது. இதனால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன
333 தூண்கள்
இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் கடலில் 2.2 கிலோமீட்டர் நீளத்தில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி வேகமாகவே நடைபெற்று வருகிறது. கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த தூண்கள் மீது 100 கர்டர்கள் இடம்பெறும். இதில் ஒவ்வொரு கர்டரும் சுமார் 20 மீட்டர் நீளமும் 28 டன் எடையும் கொண்டதாகும்.
மண்டபம் நுழைவுப்பகுதியில் இருந்து மையப்பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. அதுபோல் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதியில் வரையிலும் கர்டர் பொருத்தம் பணியானது, தூக்குப்பாலம் அமைந்த பின்னர்தான் தொடங்கப்படும்.
கூடுதலாக ரூ.85 கோடி நிதி
மையப்பகுதியில் அமைய உள்ள செங்குத்து வடிவிலான தூக்குப் பாலம் சுமார் 70 மீட்டர் நீளமும், 520 டன் எடையும் கொண்டதாகும். புதிய ரெயில் பாலத்திற்காக மேலும் ரூ.85 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.535 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றது.
தூக்குப்பாலத்திற்கான உபகரணங்கள் அனைத்தும் சத்திரக்குடியில் இருந்து தயார் செய்து பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் வைத்து அதை செங்குத்து வடிவிலான தூக்குபாலமாக ஒன்றிணைத்து வடிவமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது.
அனைத்து பாகங்களையும் வெல்டிங் செய்து ஒன்றிணைக்கும் பணி இந்த மாத இறுதியுடன் முடிவடையும்.
இந்த பணி முடிவடைந்த பின்னர் அடுத்த மாதம் புதிய தூக்கு பாலமானது நகரும் கிரேன் மூலம் மையப்பகுதிக்கு கொண்டு வரப்படும்.
பிப்ரவரியில் முடியும்
பின்னர் மோட்டார் பொருத்தி திறந்து மூடுவதற்கான பணிகள் நடைபெறும். மழை சீசனுக்கு முன்னதாக மையப்பகுதிக்கு தூக்குப்பாலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைய ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை ஆக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு மற்றும் ரெயில்வே துறையும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அதற்கேற்றபடி பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசியாவிலேயே கடலுக்குள் செங்குத்து வடிவிலான திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் கட்டப்படுவது பாம்பனில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.