தமிழகத்தில் 18 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
18 நிலையங்கள்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 309 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில், தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள பெரம்பூர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், தென்காசி, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இதேபோல, புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளாவில் காசர்கோடு, பையனூர், வடக்காரா, திரூர் மற்றும் சொரணூர் ஆகிய 5 ரெயில் நிலையங்களும், கர்நாடகாவில் மங்களூரு ரெயில் நிலையம் என மொத்தம் 25 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.616 கோடி ஆகும்.
மார்ச் மாதம்
இதில், வடசென்னை பகுதியில் முக்கிய ரெயில் நிலையமாக விளங்கும் பெரம்பூர் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற இருக்கிறது. புதிய முகப்புடன் முற்றிலும் மாறுபட்ட நவீன கட்டமைப்புடன் பெரம்பூர் ரெயில் நிலையம் புனரமைக்கப்பட உள்ளது. இதேபோல, கூடுதல் வசதிகளாக நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறை, தகவல் தொடர்பு மையம், மேற்கூரை, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்தகம், கண்காணிப்பு கேமரா ஆகிய வசதிகள் இடம்பெற உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.15 கோடி ஆகும்.
இதேபோல, செங்கல்பட்டு ரெயில் நிலையம் ரூ.18 கோடியிலும், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் ரூ.21 கோடியிலும், திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.16 கோடியிலும், கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் ரூ.17 கோடியிலும், அரக்கோணம் ரெயில் நிலையம் ரூ.22 கோடியிலும் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட உள்ள 18 ரெயில் நிலையங்களின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.381 கோடி ஆகும். ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.