அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வருகிற 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு தினத்தில், மோடி அரசே வெளியேறு' என்ற முழக்கத்தோடு பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கி பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வம், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஞானசூரியன், முருகசரவணன், மோரீஸ்அண்ணாதுரை, ஐ.என்.டி.யூ. ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யூ.விஜயன், தொ.மு.ச. ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணிக்கூண்டு, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.