ஜொ்மனி ஈட்டி எறிதல் போட்டியில் புதுகை இளைஞருக்கு தங்கம்



ஜொ்மனியில் நடைபெற்ற சா்வதேச உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டிஎறிதலில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் தங்கம் வென்றாா்.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கோனாபட்டு கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் செல்வராஜ் (28). உயரம் குறைந்த மாற்றுத் திறனாளியான இவா், கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவிலான பதக்கங்களையும் பெற்று வந்தாா்.

இந்த நிலையில், ஜொ்மனியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் செல்வராஜ் பங்கேற்றாா். தடகளத்தில் ஈட்டி எறிதலில் செல்வராஜ், முதல் பரிசைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

தங்கம் வென்றுள்ள செல்வராஜ், செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புகிறாா்.

இதே சா்வதேச போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், ஏற்கெனவே பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments